கடுமையான (acute) ஆக்சிஜன் குறைவினால் ஏற்படும் பக்கவாதத்திற்கு தியோஃபிலின், அமினோஃபிலின், காஃபின் மற்றும் ஒத்தப்பொருட்கள்

மூளையின் இரத்த நாளங்களை விரிவடையச் செய்யக் கூடிய தியோஃபிலைன் மற்றும் அதன் தொடர்புடைய மருந்துகளால், இரத்த கட்டிகளால் ஏற்படுகிற பக்கவாதத்திற்கான ஆரம்பநிலை சிகிச்சைக்கு எந்த நன்மையையும் இல்லை. இரத்தக்கட்டியினாலேயே பெரும்பாலான பக்கவாதம் ஏற்படுகிறது .பின்னர் அது மூளையின் பாதிக்கப்பட்ட பகுதியில் இரத்த ஓட்டத்தை குறைக்கிறது. மூளைக்கு போதுமான இரத்த ஓட்டம் இல்லாமையால் , விரைவில் மூளை சேதம் ஏற்படலாம். இது பெரும்பாலான நேரங்களில் நிரந்தரமான சேதமாகிறது . மூளையின் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் மருந்துகள் மூளை சேதமடைவதைக் குறைக்கவும் பக்கவாதத்திற்கு பிந்தைய விளைவுகளை மேம்படுத்தவும் பயன்படுத்தப்படுகிறது. தியோபைல்லின் மற்றும் அதன் தொடர்புடைய மருந்துகள் மூளையில் இரத்த ஓட்டத்தை மாற்றும் திறன் உள்ளவை. இந்த வகையான மருந்துகள் பக்கவாதற்கு பிந்தைய விளைவுகளை மேம்படுத்துமா என்று இந்த திட்டமிட்ட திறனாய்வு மதிப்பிட்டது. 2 சிறிய ஆய்வுகளை இந்த திறனாய்வு கண்டறிந்தது. அவை இரண்டும் எந்த பயனும் அளிப்பதாக தெரிவிக்கவில்லை. குறைவான தரவுகளே இருப்பதனால் இந்த சமயத்தில் தியோஃபிலைன் (theophylline) மற்றும் ஒத்தப் மருந்துகளை கடுமையான (acute) பக்கவாதத்திற்கு பரிந்துரைக்க இயலாது.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பு:சி.இ.பி.என்.அர் குழு

Tools
Information